சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும் என முத்தரசன் பேட்டியளித்துள்ளார். மேலும் டெல்டாவில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தது பேராபத்தை விளைவிக்கும் எனவும் கூறினார். விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கலி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.