புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயில்களுக்கு தேவையான நீர், உணவு வசதியை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. 500 மயில்கள் இந்தப் பகுதியில் உள்ள நிலையில் கடும் வறட்சி காரணமாக அனைத்து குளங்களும் வறண்டுவிட்டன என மனு அளிக்கப்பட்டது.