சென்னை: கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் சென்னையில் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதிமய்யத்தின் மத்திய சென்னை வடக்கு மாவட்டம் பொறுப்பாளர் பிரியதர்ஷினி இந்த புகாரை கொடுத்து இருக்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து தரம் தாழ்த்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அமைச்சர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கேட்டு கொண்டு இருப்பதாக பிரியதர்ஷினி குறிப்பிட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். நாக்கை அறுக்கும் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை முதலமைச்சரும் ரசித்து கொண்டு இருப்பதாக தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கூறியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு தமிழ்நாட்டை உத்திரபிரதேசம் போன்ற கலவர மாநிலமாக மாற்றிவிட கூடாது என அவர் தெரிவித்தார்.