×

5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ-யில் தகவல்

சென்னை: 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை என்று ஆர்டிஐ-யில் தெரிவந்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசால் சஞ்சய்தத் விடுதலை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ-யில் நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலோடு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று  தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  உச்சநீதிமன்றம் தீர்பபளித்து உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ விசாரணை நடத்திய சஞ்சய்தத் வழக்கில் மாநில அரசே முன்கூட்டியே விடுதலை செய்ததாக ஆர்டிஐ-யில் கூறப்பட்டுள்ளது. பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ-யில் வெளிச்சத்திற்கு உண்மை வெளிவந்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத் 2016 விடுதலை செய்யப்பட்டார். 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை நிலுவையில் உள்ளது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில் இவ்வாறு கூறயுள்ளார்,

Tags : Sanjay Dutt ,RTI , Actor Sanjay Dutt ,released ,RTI
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களின்...