நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், கைதாகிகைதாகி சிறையில் உள்ள புரோக்கர்கள் அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர், ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனசேகரன், 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.