×

ஷீலா பிரியா ஐஏஎஸ் அரசு பதவியில் இருந்து விடுவிப்பு

சென்னை, மே 16: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமை ஆணையராக இருந்த ஷீலா பிரியா அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் எஸ்.சுவர்ணா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஷீலா பிரியா நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 4ம் தேதியோடு 65 வயதை நிறைவு செய்ததால், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Sheila Priya ,IAS , Sheila Priya, IAS, government post, release
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை