×

ரவுடி கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் பிரசாத் (எ) குள்ள பிரசாத் (28). பிரபல ரவுடி. இவர் மீது கடந்த 2013ம் ஆண்டு பிரேம்குமார் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் குள்ள பிரசாத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குள்ள பிரசாத் சுற்றித்திரிவதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து குள்ள பிரசாத்தை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.


Tags : Rowdy , Rowdy, arrested
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...