மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கமலுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். கமலின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.