×

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், ராகுல், பிரியங்கா இத்தாலி சென்றுவிடுவது நல்லது: யோகி ஆதித்யநாத் விமர்சனம்

லக்னோ: இந்தியாவில் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயாரின் சொந்த நாடான இத்தாலிக்கு சென்று விடுவதாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் 17வது  மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள்  முடிவடைந்துள்ளது. இறுதிகட்ட தேர்தல் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில்  தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் வருகிற 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள பாலியா, பன்ஸ்கான் உள்ளிட்ட பகுதிகளில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்காவும் இந்திய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கருதினால், அவர்கள் இருவரும் இத்தாலி சென்றுவிடுவது தான் நல்லது என்றும், அங்கு சென்று அவர்கள் வாக்கு கேட்கலாம் என்றும் கூறினார். ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழலில் சிக்கிய இடைத்தரகரான கிறிஸ்டியன் மைகேலை இத்தாலிக்கு தப்ப துணைபுரிந்தது காங்கிரஸ் எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.



Tags : Rahul ,Priyanka ,Italy , People, Rahul, Priyanka, Italy, Yogi Adityanath, Review
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!