சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என பதில் மனு விளக்கம் அளித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை மே 17-ம் தேதிக்குள் பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.