×

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு : தேர்தல் அதிகாரி பிரகாஷ்

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் நல்ல முறையில் அமைக்கப்பட்டு இருப்பதாக, தேர்தல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்ததாக கூறினார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை பாதுகாப்பு தொடரும், அனுமதியின்றி மையங்களுக்குள் யாரும் நுழைய முடியாது என்று தெரிவித்தார்.


Tags : Prakash ,voting centers , 3 tier security , voting centers, election officer Prakash
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...