×

நெல்லை மாவட்டம் வரகனூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 5 பேருக்கு தீக்காயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் வரகனூரில் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர்.

இதையடுத்து ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதால் செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஆலைக்கு அருகில் இருந்த முட்புதிர்களை சுத்தம் செய்யும் பணியில் மாங்குடி எனப்படும் பகுதியைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள் சமையல் செய்த பகுதியில் இருந்து நெருப்பு பரவி அருகில் இருந்த பட்டாசு ஆலைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆலையில் சிதறி கிடந்த பட்டாசுகள் தீப்பற்றியதால் அங்கு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக சிவகாசி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனிடையே ஆலைக்குள் சிதறி கிடைக்கும் பட்டாசுகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : explosion ,fireworks factory ,Vadakara , Cracker, cracker, fire, crash, fire
× RELATED பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!!