சென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர் ஷாவின் பாஸ்போர்டை திருப்பி வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருந்த வழக்கில் ரன்வீர்ஷா மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர் ஷாவுக்கு முன்ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.