×

கொடைக்கானலில் சிலிர்ப்பூட்டும் ஜெகரண்டா: சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பூத்து குலுங்கும் நீல நிற ஜெகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். கொடைக்கானல் பகுதியில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிள் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக பிரையண்ட், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. அதேநேரத்தில் நகரின் சில இடங்களில் நீல நிறங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.இந்த மலர்கள் மரம் முழுவதும் படர்ந்து காண்போரை பரவசப்படுத்தி வருகிறது. நகர் பகுதியில் மட்டுமல்லாது சுற்றுலா இடங்கள், சாலையோரங்கள், அடர்ந்த வனப்பகுதிகளிலும் ஜெகரண்டா மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகின்றன.

Tags : Jegaranda ,Kodaikanal , Kodaikanal, tourists
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...