×

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரச்சிட் முடிவின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரச்சிட் முடிவின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த மார்ச் மாதமே வெளியேற பிரிட்டன் அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வின் பிரக்சிட் செயல்திட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பிரக்சிட் செயல்திட்டம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், ஒப்பந்தங்கள் ஏதுமின்றி... ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மே-வின் கோரிக்கையை ஏற்று வருகின்ற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பிரக்சிட் முடிவின் மீதான வாக்கெடுப்பு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட்டின் முடிவின் மீது இங்கிலாந்தை ஆளும் பழமைவாத கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருப்பதால் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் பொது மீண்டும் தோல்வியடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

Tags : parliament ,Britain ,European Union , European Union, Britain, brexit
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...