டெல்லி : எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். கோட்சேதான் முதல் இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதில் கொடுத்துள்ளார். உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்று கூறியுள்ளார்.