×

தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி வெற்றி: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இங்கிலாந்தில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ‘‘பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பெருமை மிகு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வென்றிருப்பது சிறப்பான நிகழ்வாகும்.

தென்னிந்திய அணியில் சென்னையைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ், பால்ராஜ், நாகலட்சுமி, மோனிஷா ஆகிய நால்வரும் பங்கேற்று வெற்றிக்கு வித்திட்டிருப்பது பாராட்டுக்குரியது. நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தெருவோர குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் அவர்களின் திறமைகள் மிளிர்ந்து இத்தகைய சாதனைகள் படைக்கவும் தி.மு.க என்றும் துணை நிற்கும், என கூறியுள்ளார்.



Tags : South Indian ,street children ,MK Stalin , children, International cricket,Congratulations, MK Stalin
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...