×

மதுரை ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர்: விருதுநகரில் மதுரை ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. விருதுநகரில் 100 அடி அகலமுடைய மதுரை ரோட்டில் 30க்கும் மேற்பட்ட அரசு, தனியார் வங்கி கிளைகள்,  கூட்டுறவு வங்கி தலைமையகம், எல்ஐசி, தீயணைப்பு நிலையம், வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து தடைப்படும் அளவிற்கு சாலையின் இருபுறமும் டூவீலர்கள்  நிறுத்தப்படுகின்றன.

மேலும் வேன், கார், லாரி, லோடுவேன், ஆட்டோக்கள் மற்றும் ஏடிஎம்களுக்கு பணம் எடுக்க வருவோர் சாலையில் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் மதுரை ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு  இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல சமயங்களில் ஆம்புலன்ஸ்கள்கூட செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வங்கிகள் முன்பு வாகனங்களை நிறுத்தி எடுக்க இடைவெளி அளவீடு செய்து கயிறு கட்ட போலீசார்  ஏற்பாடு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Madurai Road , Madurai, vehicles and traffic hazards
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை