சென்னை: நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் தொடங்கியது. நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்தும், நடிகர் சங்க கட்டுமானப் பணி குறித்தும் கூட்டததில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் நிர்வாகிகள் நாசர், விஷால் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.