×

பழைய பேப்பர் குடோனில் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு

திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட தீயை 8 மணி நேரம் போராடி தீயணைப்பு நிலையத்தினர் அணைத்தனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (42). இவர் திருப்பூர் எஸ்.வி காலனி பகுதியில் குடும்பத்தோடு வசித்துவருகிறார். இவருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோன் லட்சுமி நகர் பகுதியில்  உள்ளது. இந்த பேப்பர் குடோனில் பழைய பேப்பர்கள் மற்றும் பின்னாலாடை நிறுவனங்களில் உள்ள அட்டை நூல் கோன்களை விலைகொடுத்து வாங்கி விற்பனை செய்வதற்காக வைத்துள்ளனர். வழக்கம் போல் நேற்று இரவு  குடோனை அடைத்துவிட்டு ஊழியர்கள் சிலர் அந்த குடோனில் தங்கியுள்ளனர்.  

இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் அந்த பேப்பர் குடோனில் தீ எரிந்தது. இதை கண்ட ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருப்பூர்  வடக்கு தீயணைப்பு நிலையத்தினர் நள்ளிரவு முதல் சுமார் 8 மணிநேரமாக போராடி இன்று காலை தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். தீ விபத்திற்குள்ளான பேப்பர் குடோன் பொதுமக்கள்  குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. தீ விபத்திற்குள்ளான குடோனை மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டார். பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில்  அபாயகரமான நிலையில் அருகில் இருக்கும் இந்த பழைய பேப்பர் குடோனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Old paper kuton, fire, hug
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்