சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் பேசியதற்கு மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்த தமிழிசை பொய் பேட்டி கொடுத்ததை நினைத்து வேதனை அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.