விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பவழக்குடியில் கடந்த 8-ம் தேதி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். திலகவதி கொலை வழக்கில் போலீஸ் ஆகாஷ் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற திலகவாதியின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.