டெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. நிரந்தர கட்டுமானப் பணி எதையும் முல்லைப்பெரியாறு அணை அருகே மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. அணைப்பகுதியான ஆனவச்சலில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கும் பணியை கேரளா கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.