×

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு 6 பேர் பலி

டாப்லோ: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ பாசோ நாட்டின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில், ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது, சுமார் 20 முதல் 30 பேர் கொண்ட மர்மக் கும்பல் தேவாலயத்தில் நுழைந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உட்பட 6 பேர் பலியாயினர். பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள கடைகள் மற்றும் மருத்துவமனைக்கு தீ வைத்து அங்கிருந்த பொருட்களையும், வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றது. இச்சம்பவம் பர்கினோ பாசோவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : church , church, gunfire, 6 people, killed
× RELATED திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி