×

ஓட்டலை சூறையாடிய மர்ம கும்பலுக்கு வலை

புழல்: ஓட்டலை சூறையாடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புழல் ஜி.என்.டி சாலையில் அம்பேத்கர் சிலை அருகே ஓட்டல் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், முகமூடி அணிந்தபடி வீச்சரிவாளுடன் ஓட்டலுக்குள் புகுந்த 4 பேர் கும்பல், அங்கிருந்த மின் விசிறி, டிவி, சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தனர். இதை தடுக்க முயன்ற ஓட்டல் உரிமையாளர், புழல் அண்ணா நினைவு நகர் 4வது தெருவை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயன்றதால், அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேராவை ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 3 நாட்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிடும்போது, இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், தொடர்புடையவர்கள், ஓட்டலுக்கு வந்து பொருட்களை அடித்து உடைத்தார்களா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : mystery gang ,hotel , Hotel charm, mystery mob, web
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!