×

சிறுமியை கடத்தி திருமணம் ஆந்திர வாலிபர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 14 வயது மகளை காணவில்லை என்று கடந்த 8ம் தேதி புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமியை திருப்பதியில் இருந்து வந்த அவர்களது உறவினர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி பேருந்தில் ஆந்திராவுக்கு கடத்திச் சென்று திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
 
இதையடுத்து, புளியந்தோப்பு போலீசார் ஆந்திராவுக்கு சென்று சிறுமியை மீட்டு, அந்த வாலிபரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பாலகிருஷ்ணன் (21) என்பதும், சிறுமியின் உறவினர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்: மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அசாருதீன் (22). இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி, ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அசாருதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Andhra Pradesh , Young girl kidnapped, marry, AP young, arrested
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி