×

பானி புயல் பாதிப்பு ஒடிசாவுக்கு தமிழக அரசு ₹10 கோடி நிதி

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு, ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ₹10 கோடி நிவாரண நிதியுதவியை வழங்க உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார்.இதன்படி இன்று ₹10 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னையில் உள்ள ‘ஒடிசா பவன்’ மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : storm ,Bani ,state government ,Odisha , Bani storm, Odisha, Tamilnadu Government, Rs 10 crore, finance
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...