மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.