×

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு: 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவரை கைது செய்தது சிபிஐ

கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம்  எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார்,  மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மாதம் 28-ம் தேதி இந்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு  மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் முகாமிட்டு ரகசிய விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு இரவு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். மேலும் பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை  வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பேரில், மேலும் 3 பேர் விரைவில் கைதாவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, கைதான  மற்றவர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பாலியல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டி வருவதாகவும்  சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த  மணிவண்ணன் என்ற இளைஞரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Pollachi ,arrests ,CBI , Pollachi rape case, arrested, CBI
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!