சென்னை: பிரிவினை கருத்துகளை வேண்டுமென்றே ஓட்டு அரசியலுக்காக கமல் பேசுகிறார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். ஓட்டு அரசியலுக்காக கமல்ஹாசன் போன்றோர் சர்ச்சையாக பேசி வருவதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சியும் தீவிரவாத அமைப்புதான் எனவும் குற்றம் சாட்டினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குழம்பிப்போய் உள்ளார் எனவும் தெரிவித்தார்.