×

திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் குப்பை கொட்டப்படும் தெருக்களில் கோலம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குப்பை கொட்டப்படும் தெருக்களில் குப்பைகளை கொட்டாத வண்ணம் நகராட்சி ஊழியர்கள் கோலம் போட்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. நகராட்சி சார்பில் தூய்மையை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியும் பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டிய வண்ணமே உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி நகராட்சி பகுதி தெருக்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டும் இடத்தில் குப்பைகளை கொட்டா வண்ணம் கலர் பொடியை கொண்டு கோலம் வரைந்து வருகின்றனர். குப்பை கொட்ட வரும் பெண்கள் இந்த கோலத்தை பார்த்து குப்பை கொட்டாமல் திரும்பி செல்கின்றனர். இந்த நூதன முறை விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : streets ,Srivilliputhur ,area , Kolam, Srivilliputhur
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...