சென்னை: மத்திய, மாநில அரசுகள் தேசிய, மாநில அளவில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி பயிற்சி மையம், பயிற்சியாளர் அமைத்து, அவர்களது விளையாட்டுக்கு உதவிட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.