×

அமைகிறதா 3-வது அணி?...... இன்று மாலை ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகரராவ்

சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் மே 23-ம் தேதி வையாகவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக, முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களை சமீப காலமாக சந்திக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் சந்திரசேகரராவ், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார். அந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்று என்றும் கூறினார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சந்திரசேகரராவ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : team ,Chandrasekarao ,Stalin , Chandrasekara rao, MK Stalin, DMK
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா