ராமநாதபுரம்: பழங்குடியின பிரிவினரான காட்டு நாயக்கர் மக்கள் சாதி சான்று வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை எனக் கூறி காட்டு நாயக்கர் மக்கள் போராட்டம் நடத்தினர். காட்டுநாயக்கர் என சாதி சான்று வழங்க கோரி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.