×

தாராபுரம் அருகே வீதியில் கல் மழை வீடுகளில் திடீர் தீ

 தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகில் உள்ள எம்.காளிபாளையம் கிராமத்தில் 150 குடும்பம் வசிக்கிறது. இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் திடீரென தீ பிடித்து எரிகிறது. திடீரென பற்றி எரியும் தீயால் துணிமணிகள், குழந்தைகளின் நோட்டுப்புத்தகங்கள் தீக்கிரையாகின. கடந்த 4 நாளாக இதுபோல 30 வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று 4வது நாளாக இச்சம்பவம் தொடர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வேலைக்குகூட செல்லாமல்  மரத்தடிகளில் முடங்கி கிடக்கின்றனர்.இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், ``கடந்த 4 நாட்களாக வீடுகளுக்குள் ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது. போர்வை, தலையணை, துணிமணி, நோட்டுப்புத்தகம் என பொருட்கள் எரிந்து நாசமாகின்றன.  
ஒரு வீட்டில் எரியும் தீயை அணைத்து விட்டு வருவதற்குள் அடுத்த தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் தீப்பிடித்து எரிகிறது, இதற்கு மந்திரவாதிகள் காரணம் என்று கிராமத்தில் பீதி நிலவுகிறது’’ என்று கூறினர்.

அசம்பாவித சம்பவங்களுக்கு என்ன காரணம், சமூகவிரோதிகள் யாராவது சதிச்செயல் செய்து வருகிறார்களா என்பதை கண்டறிய கிராமத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு ேகமரா வைத்து போலீசார் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி காளிபாளையம்-பழனி செல்லும் சாலையில் கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்து கோஷமிட்டனர்.  தீ தடுப்பு நடவடிக்கையாக தண்ணீர் நிரப்பிய லாரிகள், பேரல்கள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன. புகாரின்பேரில் மூலனூர் போலீசார் பாதுகாப்புக்கு வந்துள்ளனர்.  தங்களது கிராமத்தில் நடைபெறும் திகிலான சம்பவத்திற்கு காரணம் தெரியும் வரை வீடுகளுக்குள் குடியிருக்க முடியாது என சாலையோரம் சமையல் செய்து சாப்பிட தொடங்கியுள்ளனர்.

Tags : fire ,rain homes ,road ,Dharapuram , fire broke,stone, rain homes
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...