×

வீட்டில் பதுக்கிய நாட்டு குண்டு வெடித்தது

நெல்லை: பாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை அடுத்த மலையடிவாரத்தின் ஒதுக்குப்புறமாக கட்டுமான பணி நடைபெறும் நிலையில் ஒரு வீடு உள்ளது. இதில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த சிவா என்ற நாராயணன், அவரது தம்பி அருள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் சமையல் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டின் பின் பக்க கதவுகள் சேதமடைந்துள்ளன. தகவலறிந்து பாளை தாலுகா போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த வெடிக்காத 2 குண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்தனர். தப்பிய சிவா மற்றும் அவரது தம்பி அருளை போலீசார் தேடுகின்றனர்.


Tags : home , Housed,house, country, exploded
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...