சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் பைக்குகளில் ரேசில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக்குகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கை ஓட்டி வந்த வாலிபர்கள் சங்கர் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், படுகாயமடைந்த இருவரும் பைக் ரேசில் ஈடுபட்ட போது நிலைதடுமாறி கீழே விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.