×

பாடி, அம்பத்தூர் பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரி, டாக்டர் வீடுகளில் 60 சவரன் நகை துணிகர கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

அம்பத்தூர்: சென்னை பாடி கோல்டன் காலனி, 4வது தெருவை சேர்ந்தவர் லீனாநாயர் (62). ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. தனியாக வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கீழ்தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்கியுள்ளார்.  நேற்று காலை எழுந்து கீழே வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 20 சவரன் நகைகள் மற்றும் ₹5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கொரட்டூர் போலீசார் விசாரித்து  வருகின்றனர்.மற்றொரு சம்பவம்:  அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் விரிவு, மாந்தோப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மலர்வண்ணன் (31). இவரது மனைவி திவ்யா (28). இவர்கள் இருவரும் அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  டாக்டராக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் பணிக்கு சென்ற தம்பதி, வேலை முடிந்ததும் அம்பத்தூரில் உள்ள மலர்வண்ணனின் தந்தை டாக்டர் வரதராஜன் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்து, நேற்று முன்தினம் இருவரும் தங்களது வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ₹2 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள்  ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. இதுகுறித்து டாக்டர் மலர்வண்ணன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : IAS officer ,burglars ,Batti ,homes ,Ambattur ,Doctor , Badi ,Ambattur , IAS officer, 60 sovereign, victims
× RELATED 90 கிராமங்கள் பயனடையும் வகையில் ₹4 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம்