×

திருச்செந்தூர் கோயிலில் 18ல் வைகாசி விசாகத்திருவிழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வருகிற 18ம் தேதி வைகாசி விசாகத்திருவிழா நடக்கிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. 12 மாதாந்திர வெள்ளிக்கிழமை தரிசனம் செய்யும் பலன், விசாக திருநாளன்று முருகப்பெருமானை வழிபட்டாலே கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தகைய பிரசித்திப் பெற்ற வைகாசி விசாக பெருந்திருவிழா, வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது. விழாவில் ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகுகுத்தியும், காவடி எடுத்து கலந்து கொள்கின்றனர்.

Tags : festival ,temple ,Tiruchendur , Thiruchendur Temple, Maya Vishakathirigai
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா