×

நெல்லை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்க்கையில் ஜன்னல் மற்றும் கதவுகள் சேதம் அடைந்திருந்தன. இதுதொடர்பாக அந்தப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்திய போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்து மேலும் இரு நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து  கணேசனின் குடும்பத்தாரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணையில் கணேசனின் இரு மகன்களான சிவா மற்றும் அருள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பு  தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : house ,Nelli , Nellai, country bombs
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...