×

ராஜபாளையம் விசைத்தறி தொழிலார்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி தொழிலார்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சத்திரப்பட்டியில் சிறு விசைத்தறி தொழிலார்கள்  கடந்த ஆண்டு கூலிஉயர்வு சம்பந்தமாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலி வழங்காததை அடுத்து கடந்த 10 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அடுத்து வட்டாச்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 100 மீட்டருக்கு 86 ரூபாய் தருவதாக சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதை அடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தை திரும்ப பெற்று தொழிலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

Tags : Rajapalayam ,strike , Rajapalayam, looming, workers, struggle, withdrawal
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...