×

பொள்ளாச்சி ஆழியாற்றில் மூழ்கி சென்னை சிறுவர்கள் 2 பேர் பலி

பொள்ளாச்சி: சென்னை  அமைந்தகரையை  சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் உட்பட 26 பேர் நேற்று முன்தினம் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதற்காக  வேனில் வந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி  அருகே அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஓர் உணவு விடுதியில்  சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர்  அம்பராம்பாளையம் வழியாகச் செல்லும்  ஆழியார் ஆற்றில் குளிக்க சென்றனர்.
இதில் நான்கு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி  தத்தளித்தனர். அவர்களை மற்றவர்கள்  மீட்க முயன்றனர்.

அதற்குள் ஞானசேகரன் மகன் கிரித்திக் கண்ணன் (வயது 11, 6ம் வகுப்பு படித்து வந்தான்), ஆதம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் அஸ்வந்த் (16, பதினோராம் வகுப்பு படித்து வந்தான்) ஆகிய இரண்டு பேரும்  உயிரிழந்தனர். மேலும் மார்டின் எட்வர்ட், ஹரிதாஸ் ஆகிய இரண்டு பேர் மயக்க நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இது குறித்து ஆனைமலை போலீசார், வழக்கு பதிந்து  விசாரிக்கின்றனர்.


Tags : children ,Pollachi Aghalya , Two children , Pollachi, Aghalya
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...