×

திருச்செந்தூர் அருகே பரிதாபம் நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

உடன்குடி: திருச்செந்தூர் அருகே தண்ணீரின்றி நெற்பயிர் கருகியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அடுத்த மெஞ்ஞானபுரம் அருகே பிள்ளைவிளையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (68). விவசாயியான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழை, பருத்தி, நெல்  சாகுபடி செய்து வந்தார். சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதேபோல் இந்தாண்டும் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் தவித்த பாக்கியராஜிடம்,  விவசாயத்திற்காக கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று காலை தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மதியம் சாப்பாடு கொண்டு சென்ற  மகன் சுரேஷ் சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கு கொண்டு வந்தார். அதற்குள் பாக்கியராஜ் இறந்துவிட்டார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiruchendur , Poorness ,Tiruchendur, Paddy , Farmer suicide
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...