×

புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கொக்கு, கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கொக்கு மற்றும் கிளி உள்ளிட்ட பறவைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கூடப்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சுமார் 25-க்கும் மேற்பட்ட கொக்குகள் ,15-க்கும் மேற்பட்ட பச்சை கிளிகள் மற்றும் 1 மைனா ஆகியவை விற்பனைக்காக சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். வனத்துறை அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பறவை வியாபாரிகள், அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

Tags : Cuckoo ,Parrot ,Myna ,sale ,Puducherry , Cuckoo, Parrot, Myna , sold for sale, Puducherry
× RELATED எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி