உ.பி: நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்தால் மட்டுமே அணு ஆயுத சோதனையை நடத்த துணிச்சல் வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வாஜ்பாய் அரசு வெற்றிகரமாக அணு ஆயுத சோதனையை நடத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அணு ஆயுத சோதனை மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.