×

இரிடியம் உள்ள கோபுரக் கலசங்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என ஆசைக்காட்டி பணம் பறிமுதல்

சென்னை: இரிடியம் உள்ள கோபுரக் கலசங்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என ஆசைக்காட்டி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திண்டிவனம் , வேலூர் உள்ளிட்ட இடங்களில் இரிடியம் மோசடி கும்பல் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இரிடியம் விவகாரத்தில் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொன்று  புதைக்கப்பட்டுள்ளது. கேரள கொலையில் தேனியைச் சேர்ந்த இரிடியம் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போடியில் பதுங்கிய இரிடியம் கும்பலுக்கு கேரள கொலையில் தொடர்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 துப்பாக்கிகள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவரிடம் 2 வது நாளாக காவல்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆயுதங்களை காட்டி இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். தப்பியோடிய 9 பேரை பிடிக்க தமிழக முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Iridium, tower cranes, money laundering
× RELATED 45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன்...