×

சிகிச்சைக்கு சென்னை வந்த வடமாநில பெண்ணிடம் 20 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர் : சிசிடிவி காட்சி மூலம் துப்பு துலங்கியது

சென்னை: கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்த வட மாநில பெண்ணி டம்  20 ஆயிரத்தை பறித்து சென்ற  இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் பன்குரா பகுதியை சேர்ந்தவர் சிபானி மண்டி (55). இவர், தனது கண்  அறுவை சிகிச்சைக்காக கடந்த 8ம் தேதி அதிகாலை ரயில் மூலம் சென்னை வந்தார். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில், எழும்பூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தின் மேல் ஆட்டோ சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 3 பேர், சிபானி மண்டி வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினர். அதில், சிகிச்சைக்காக கொண்டு வந்த ₹20 ஆயிரம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகள் இருந்தன. இதுகுறித்து சிபானி மண்டி, பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

அதில், கொருக்குப்பேட்டையை ேசர்ந்த சீனிவாசன் (21), தமிழ்செல்வன் (19), அருண்குமார் (20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்களில் சீனிவாசன் மற்றும் தமிழ்செல்வனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அருண் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : lady ,Northwest ,Madurai , Two teenagers ,20,000 people ,northwestern woman
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...