×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் சடலம் கரை ஒதுங்கியது

பெரம்பூர்: காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய அடையாளம் இருந்தது.விசாரணையில், இறந்து கிடந்தவர் காசிமேடு பவர் குப்பத்தை சேர்ந்த மீனவர் ஜான்சன் (33) என்பது தெரியவந்தது. இவரை யாரேனும் கொலை செய்து, கடலில் சடலத்தை வீசினார்களா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Fisherman ,fishing harbor ,Kasimedu , Fisherman's body , sealed ,Kasimedu fishing harbor
× RELATED மீனவர் திடீர் சாவு