×

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் சிக்கினர்

பல்லாவரம்: குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேரந்தவர் சசிகலா (37). இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பஸ்சில் ஏறி உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பம்மல் அருகே சென்றபோது, பர்தா அணிந்துகொண்டு இருந்த மூன்று பெண்கள், சசிகலா அருகில் நின்று பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர், சசிகலா கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றார். மற்ற இருவர், அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சுதாரித்துக்கொண்ட சசிகலா, செயினை பிடித்துக்கொண்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு திரண்ட சக பயணிகள், அந்த 3 பெண்களையும் பிடித்து, தர்மஅடி கொடுத்து சங்கர் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரியா (26), சங்கரம்மா (28), அபிராமி (25) என்பதும், இவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளின் நகை, பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : girls , 3 girls , running bus , trapped
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்