×

மோடி பேச்சை கேட்டா சிரிப்பு சிரிப்பா வருது...! மாயாவதி டிவிட்

உத்தரப் பிரசேத்தில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சிகள் ஜாதிய ரீதியிலான கூட்டணியை அமைத்துள்ளதாக விமர்சித்தார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், ‘எங்கள் கூட்டணியை ஜாதி கூட்டணி என்று மோடி கூறுவது சிரிப்பை வரவழைக்கிறது. அது மட்டுமல்ல, இது பிரதமர் மோடியின் முதிர்ச்சியற்ற ேபச்சாகும். மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்ைத சேர்ந்தவர் கிடையாது. அவர் ஜாதியால் ஏற்படும் வலியை அனுபவித்து இருக்க மாட்டார்.  இதுபோன்ற பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவர் பிற்படுத்தப்பட்டவர் என்று கூறிக்கொண்டு ஜாதிய வாதத்தில் ஈடுபடுகிறார். மோடி தனது பிறப்பால் பிற்படுத்தப்பட்டவராக இருந்திருந்தால் ஆர்எஸ்எஸ் அவரை பிரதமராக்கி இருக்காது. கல்யாண் சிங் போன்ற தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

எதிர்கட்சிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு பதிலாக, குஜராத்தில் என்ன நடக்கிறது என்பதை மோடி நேரில் சென்று பார்க்க வேண்டும். தலித்கள் அங்கு கவுரமான வாழ்க்கையை நடத்த முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.  திருமணத்தின்போது குதிரையில் செல்வதற்கு கூட தலித் இளைஞரை அனுமதிப்பது கிடையாது. பாஜ பேசுவதை வைத்தே அக்கட்சி தேர்தலில் தோல்வியயை சந்திக்கப் போவதை உணர்ந்து விரக்தி அடைந்துள்ளது என்பது தெரிகிறது. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

Tags : Modi ,Mayawati , Laughs Modi smile, Mayawati's tweet
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...